தமிழகத்தின் ஆறுகள்,ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகள் குறித்த நேரடி ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட¢ட டாக்டர் கனகராஜ் எழுதிய அவலநிலையில் தமிழக ஆறுகள் என்னும் புத்தகத்திலிருந்து இக்கட்டுரை சுருக்கித் தரப்பட்டுள்ளது.பாலாற்றுப்படுகையில் வாணியம்பாடியிலிருந்து தாமல் கிராமம் வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன.நிலத்தடி நீர் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளால் முற்றிலும் மாசடைந்து போன கிராமங்களாக இவை மாறியுள்ளன.விவசாய நிலத¢தில்50சதவீதம் சாகுபடியற்ற பரப்பாக மாறியுள்ளது.நீர்வளமிக்க பகுதிகளாக இருந்த இப்பகுதியில் இப்போது நீர் வியாபாரம் அதிகமாக நடைபெறுகிறது.கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.கடந்த20ஆண்டுகளில் கால்நடைகளின் எண்ணிக்கை70சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.சராசரி மழைப்பொழிவு குறையவில்லை.ஆனாலும் ஏன் இந்த நிலை என்பதை புத்தகம் ஆய்கிறது.
தமிழக ஆறுகளின் அவலநிலை-பேரா.ஜனகராஜன்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: பேரா.ஜனகராஜன்₹15.00
பூமி உள்வாங்கும் நீரின் அளவைவிட இறைக்கப்படும் நீரின் அளவு அதிகமாகி வருவதால் வறட்சிக்காலங்களில் நிலத¢தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகிறது.சக்திமிக்க நீர்மேலாண்மையும் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏரிகள் குளங்களைப் பராமரிப்பதும் உடனடித்தேவை என்பது நமக்கு உணர்த்தும் புத்தகம்.
In stock
Related products
₹210.00
சிறுவர் கதைகள்
₹105.00
சூழலியல்
₹70.00
சிறுவர் நாவல்
₹70.00
அறிவியல்
₹40.00









Reviews
There are no reviews yet.