எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலை முன்வைத்து சாதிய, மதவாத சக்திகள் திட்டமிட்டுச் செய்த தவறான பரப்புரைகளும் அந்நாவலைத் தடை செய்ய வேண்டும் என நடத்திய போராட்டங்களும் நாடறிந்த கசப்புகள். ‘‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான்’’ என அவர் அறிவித்த பின்னணியில், எழுத்து சுதந்திரம் காக்கும் போரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் களத்திலும் நீதிமன்றத்திலும் முன்னெடுத்தது. ஜனநாயக எண்ணம் கொண்ட பலரும் பல அமைப்புகளும் இப்போரில் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமுஎகச தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தீர்ப்பு. அத்தீர்ப்பின் முழு வடிவத்தை தமிழில் தோழர் வீ.பா. கணேசன் அவர்களின் மொழி பெயர்ப்பில் தமுஎகச வெளியிடுகிறது.
வழக்கு எண் 1215 / 2015 ‘மாதொருபாகன்’ வழக்குத் தீர்ப்புரை
Publisher: பாரதி புத்தகாலயம்₹130.00
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலை முன்வைத்து சாதிய, மதவாத சக்திகள் திட்டமிட்டுச் செய்த தவறான பரப்புரைகளும் அந்நாவலைத் தடை செய்ய வேண்டும் என நடத்திய போராட்டங்களும் நாடறிந்த கசப்புகள். ‘‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான்’’ என அவர் அறிவித்த பின்னணியில், எழுத்து சுதந்திரம் காக்கும் போரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் களத்திலும் நீதிமன்றத்திலும் முன்னெடுத்தது. ஜனநாயக எண்ணம் கொண்ட பலரும் பல அமைப்புகளும் இப்போரில் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமுஎகச தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தீர்ப்பு. அத்தீர்ப்பின் முழு வடிவத்தை தமிழில் தோழர் வீ.பா. கணேசன் அவர்களின் மொழி பெயர்ப்பில் தமுஎகச வெளியிடுகிறது.
Out of stock








Reviews
There are no reviews yet.