மதுவிலக்கு அரசியலும் வரலாறும்



150.00

மது விலக்கை அமல்படுத்தும் போதும்,ரத்து செய்யும் போதும் ஏற்படும் நேரடி,பக்க விளைவுகளைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கும் புத்தகம் இது.தமிழகத்தில் கடந்த எண்பத்தைந்து ஆண்டுகளாக விவாதத்தில் இருக்கும் விவகாரம் மதுவிலக்கு,இது சாத்தியமா,இல்லையா என்ற கோணத்தில் ஒருபக்கம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.இன்னொரு பக்கம்,மதுவிலக்கு தேவையா,இல்லையா என்பதை முதலில் முடிவுசெய்வோம்,அதன்பிறகு அடுத்தகட்டம் நோக்கி இயல்பாக நகரலாம் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.வெவ்வேறு காலகட்டங்களில் நிலவிய சமூக,அரசியல் குழலைப் பொறுத்து தமிழகத்தில் மதுவிலக்கு அமலாவதும் பிறகு ரத்தாவதும் இங்கே தொடர் நிகழ்வுகள்,மதுவிலக்கை ரத்துசெய்கிறோம் என்பதை நேரடியாகச் சொல்லாமல்,மதுலிக்கை ஒத்தி வைக்கிறோம் என்று நாசூக்காகச் சொல்லியிருக்கிறது அதிமுக அரசு.இப்படியாக மதுவிலக்கு அரசியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.நூலாசிரியர் ஆர் முத்துக்குமார் மயிலாடுதுறையில் பிறந்தவர்.தமிழின் நிகழ்கால எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.பத்தாண்டுகளுக்கு மேலாகப் பத்திரிகை,பதிப்புத்துறையில் இயங்கிவருபவர்,இந்திய,தமிழக அரசியல் குறித்து விரிவான வாசிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டு வருபவர்,நடப்பு அரசியல் குறித்து தமிழன் முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பப்ளிகேஷன்ஸின் ஆசிரியர்,இந்தியத் தேர்தல் வரலாறு,தமிழக அரசியல் வரலாறு,திராவிட இயக்க வரலாறு உள்ளிட்ட இவருடைய பதிவுகள் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றவை.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock

    SKU: 50013 Category: